A.P.Mathan / 2013 மே 06 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஸாம் மாநில வழக்கு தமிழகத்தில் எதிரொலிக்கிறது. அம்மாநிலத்தில் மகிந்திர நாத் தாஸ் என்பவருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை மே மாதம் 1ஆம் திகதி ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது இந்திய சுப்ரீம் கோர்ட். இந்த ஆயுள் தண்டனை குறைப்பு தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை மேலும் வலுப்பெற வைத்துள்ளது. இந்திய வரலாற்றில் "கருணை மனு" விவகாரம் இந்திரா காந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட "கேகர் சிங்" வழக்கிற்கு பிறகு, இப்போதுதான் இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்படுகிறது. குடியரசு தலைவரின் அதிகாரம் என்ன? கவர்னரின் அதிகாரம் என்ன? நீதிமன்றங்கள் எந்தெந்த விஷயங்களில் தலையிட முடியும் என்பதெல்லாம் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியாவில் அனல் பறக்கும் விதத்தில் அலசப்படுகிறது என்றால் ராஜீவ் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் எழுந்த கோரிக்கையின் விளைவுதான். குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக சட்டமன்றமே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற போடப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் என்றால் மிகையாகாது.3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago