Menaka Mookandi / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
"பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே நான் பதிவு செய்யவில்லை" என்று இந்தியாவின் அதிமுக்கியமான விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யின் எஸ்.பி.யாக இருந்த தியாகராஜன் அறிவித்திருக்கிறார். இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு தயாரிக்கப்பட்ட மனிதவெடிகுண்டை இயக்க பேட்டரி வாங்கிக் கொடுத்தார் பேரறிவாளன் என்பதுதான் சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பேரறிவாளன் தண்டிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பாதுகாப்பு வழக்குகளில் போதிய சாட்சியங்களை சுட்டிக்காட்டி, நிரூபிக்க பேருதவியாக இருக்கின்றன. ஆனால் அப்படி பெறப்பட்ட வாக்குமூலத்தையே இவ்வளவு அஜாக்கிரதையாக ஒரு எஸ்.பி பதிவு செய்திருப்பார் என்றால், ராஜீவ் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட பல வாக்குமூலங்களின் கதி என்ன? அந்த வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை பற்றி என்ன சொல்வது? இது எல்லாமே ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது. வெறும் வாயைப் போட்டு மெல்லுவோருக்கு தியாகராஜன் எஸ்.பி. போன்றோரின் பேட்டி அவலைப் போட்டு மெல்லுவது போன்ற வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.15 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
1 hours ago