A.P.Mathan / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் மாநாடு எதிர்பார்த்தபடி அமைதியாக முடிந்து விட்டது. "அங்கே கூட்டணி முடிவை அறிவித்து விடுவார்" என்று நினைத்து கடந்த ஒரு மாதமாக பத்திரிகைகள், அரசியல் பார்வையாளர்கள் நடத்திய "வாக்குவாதப் போர்" முடிவுக்கு வந்திருக்கிறது. "கூட்டணி பற்றி முடிவு எடுக்க இன்னும் நேரம் இருக்கிறது" என்பது போல் அமைந்து விட்டது சென்னையிலிருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தே.மு.தி.க.வின் "ஊழல் எதிர்ப்பு மாநாடு"! இக்கூட்டத்தில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அ.தி.மு.க.வை கடுமையாக சாடினார்கள். அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் போன்றோர் தமிழக காவல்துறையை சகட்டுமேணிக்கு விமர்சித்துத் தள்ளினார்கள். தே.மு.தி.க. மாநாடு நடைபெறுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரம், தே.மு.தி.க.வினர் வழி நெடுகிலும் வைத்த கட் அவுட்கள், பேனர்கள் போன்றவற்றிற்கு நெருக்கடி கொடுத்த விவகாரம் என்று பல விஷயங்கள் அவர்களின் தாக்குதலில் முன்னணி பெற்றுத் திகழ்ந்தது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .