2025 ஜூன் 12, வியாழக்கிழமை

4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அபகரிப்பு

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து செல்லப்பட்ட சம்பவமொன்று புறக்கோட்டையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட நால்வரை, அங்கு வேலைச்செய்தவர்களின் கைகளுக்கு போலியான முறையில் கைவிலங்கிட்டு, தங்கத்தை அபகரித்து சென்றுள்ளனர்.

அவ்வாறு அபகரித்தவர்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி அவர்களிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபாயையும், கடவுச்சீட்டுகளையும் அக்குழுவினர் அபகரித்துச்சென்றுள்ளனர்.

இந்தத் தங்க நகை ஆபரண பட்டறையில் வேலைச்செய்வோரில் பலர், இந்தியப் பிரஜைகள் என்று அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13