Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
'உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமையால், ஜனாதிபதித் தேர்தலும் பிற்போடப்படும் என்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவின் கருத்தை, நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கான காரணம், எல்லை நிர்ணயங்கள் ஒழுங்காக இன்னமும் நிர்ணயிக்கப்படாமையே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்திருந்தார். எமது தலையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய எண்ணக்கருவில்லை' என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள், எல்லை நிர்ணயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை பூர்த்திச் செய்யப்படும். இன்னும் ஐந்து மாவட்டங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான வரைபட ரீதியான பூர்த்தி வேலைப்பாடுகள் எஞ்சியுள்ளன' என்றார்.
'2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், வருட இறுதிக்குள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் விகிதாசாரத் தேர்தல் தொடர்பிலான சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அரசியலமைப்பின் 19ஆம் 20ஆம் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே, தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, நேர்மையான ஒரு கட்சியானால், அதனைச் செய்வதற்கு முன்வர வேண்டும். இவ்விரண்டையும் மேற்கொள்வதற்கு, இதனைவிடச் சிறந்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது' என, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
7 hours ago