Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைய மாட்டாது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'எதிர்க்கட்சித் தலைவருக்கும் வட மாகாண மக்களுக்கும், எமது கட்சி தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பிலும் நல்லெண்ணமொன்று உருவாக்கியுள்ளது.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்றோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் என்றோ, பேதங்களை காட்டுபவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லர். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செயற்படவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago