Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னை நீக்கியது தெரியாது என்றும் தான் கேட்டதை இதுவரையிலும் கொடுக்கவில்லை என்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வலப்பனைத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும் எம்.பியுமான சி.பி ரத்னாயக்க தெரிவித்தார்.
கடந்த 24 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளராக இருந்த சி.பி. ரத்னாயக்க, இம்முறை மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்போது, தொகுதி அமைப்பாளர் பதவியை இழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'வலப்பனை தொகுதிக்கு புதியவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில், கட்சியினால் எனக்கு அறிவிக்கப்படவில்லை.
தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு முதல் வலப்பனை தொகுதி அமைப்பாளராக பதவிவகித்த தான், வலப்பனை பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டு தலைவர் பதவியை பெற்றுக்கொடுத்த ஜகத் குமார சமரஹேவை தொகுதி அமைப்பாளராகவும், தனியார் போக்குவரத்து அமைச்சராகத் தான் இருந்தகாலத்தில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ரொஷான் குணவர்தன நுவரெலியா மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டமை வருத்தமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற வகையில், இவ்வாறு முன்னோக்கி நகர முடியுமா என்பது தொடர்பில் பல்வேறான சிக்கல்கள் தோற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் உறுப்புரிமையை 1977ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட தன்னை 1994ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் நாடாளுமன்றத்துக்கு தொடர்ச்சியாக தெரிவு செய்த நுவரெலியா மாவட்ட மக்களை இலகுவில் மறந்துவிட முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago