2025 ஜூன் 12, வியாழக்கிழமை

2 பிள்ளைகள் கடலில் மாயம்; பெற்றோர் மரணம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

கடலிலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் கடல் அலையினுள் மூழ்கி இறந்துள்ள தகவல் அறிந்த பெற்றோர் இருவரும் மரணமடைந்துள்ளனர். துக்கம் தாங்காமலே இவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை(19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி திருமதி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர்களே இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவித்தனர்.  

பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இரு சகோதரர்கள் காணவில்லையென கல்குடா பொலிசார் தெரிவித்தனர். ஜந்து பேர்கள் பாசிக்குடா கடலுக்கு, குளிக்கச் சென்றதாகவும் அவர்களில் கடல் அலையினால் நீரில் மூழ்கி காணமால் போயுள்ளதாகவும் ஏனைய மூவர்களும் மீனவர்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் சதீஸ்குமார் வயது (20) மற்றும் அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் வயது (18) ஆகியோர்களை காணவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை தேடும் பணி ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்படவில்லையெனவும் காப்பற்றப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13