2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாத்தறையில் தீ விபத்து: படையினர் அனுப்பிவைப்பு

George   / 2016 ஜனவரி 14 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கொட்டுவேகொடை பிரதேசத்தில் உள்ள சில கடைகளில் இன்று இரவு ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு காலி, தங்கல்லை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீவிபத்து காரணமாக கொட்டுவேகொடையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X