Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறநகர்ப் பகுதிகளிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் இறைச்சிகளை, எதிர்வரும் மூன்று தினங்களுக்குக் கொள்வனவு செய்ய வேண்டாமென மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிருக வைத்தியர்கள், இன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து 48 மணி நேரப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையால், கொழும்புக்குக் கொண்டு வரப்படுகின்ற இறைச்சிகள், எதிர்வரும் மூன்று தினங்களுக்குப் பரிசோதனைக்குட்படுத்தப்படமாட்டாதென மிருக வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி குமார தெரிவித்துள்ளார்.
மிருக வைத்தியர்களினால் குறித்த இறைச்சிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படாமையால், இறைச்சிகளைக் கொள்வனவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago