Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மேனகா மூக்காண்டி
ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, யாருக்கும் தெரியாமல் சர்வதேச நாடுகளிடமிருந்து, 1,300 பில்லியன் ரூபாய் கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்பது தொடர்பில், நிதியமமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளார் என்று, அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறினார்.
'இவ்வாறு பெறப்பட்டுள்ள இரகசியக் கடன் தொகையையும் இந்த அரசாங்கமே செலுத்த வேண்டியுள்ளது' என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போது அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரபல ஹோட்டலொன்றின் இரண்டு மாடிகள், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கென அதிசொகுசு மாடிகளாக நிர்மாணிக்கப்பட்டு வந்தன. அந்த மாடிகளில், அனைத்து வசதிகள் காணப்படும் வகையிலேயே, அவை நிர்மாணிக்கப்பட்டு வந்தன' என்றார்.
'இப்படியானவர்கள் தான், இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமென்று கூறிக்கொண்டு பாதயாத்திரை செய்கிறார்கள். ராஜபக்ஷக்களால் நட்டத்தை மாத்திரமே சம்பாதித்தவர்கள், இன்று நன்மையடைந்து வருகின்றனர்.
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான அரையாண்டு காலப்பகுதியில், வரி அறவீடு மூலம் ஆயிரம் பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.
ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின் போது, வரி அறவிடப்படாத வகையில் கள்ளப் பாதைகளினூடாக
பொருட்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், வரி வருமானமொன்று கிடைக்கவில்லை. ஆனால், முறையாக வரி அறிவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், அரசாங்கத்துக்கு ஆயிரம் பில்லியன் ரூபாய் வரி வருமானம் கிடைத்துள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago