Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலைசெய்யப்பட்ட மாணவியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 35 வயதான பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடான ருவன் குணசேகர தெரிவித்தார்.
மாணவியின் உடலிலிருந்து டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்கத் தேவையான மூலக் கூறுகள், சாட்சியாக ஏற்கெனவே பெறப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை, டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவியின் ஆசிரியையான தாயாரும் சகோதரர்களும் பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில், தனிமையில் இருந்த மாணவி தாயார் வீடு திரும்பியபோது வீட்டின் அறையொன்றில் கடந்த செவ்வாய்கிழமை (16) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இம்மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், 'குறித்த மாணவி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் தன்னை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சித்துள்ளார். இருப்பினும், துஷ்பிரயோகத்தின் பின்னர் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .