Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மேனகா மூக்காண்டி
'காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை நிறுவுவதற்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் வழக்குத் தாக்கல் செய்யப்போகிறார்கள் என்றால், அது நல்ல விடயமே. அப்போது தான், உண்மைகள் பல வெளியாகும்' என்று, அரசாங்கம், நேற்றுத் தெரிவித்தது.
'காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவது மட்டுமே மேற்படி அலுவலகத்தின் கடமையாகும். அதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்குவது அலுவலகத்தின் நடவடிக்கை அல்ல. அவ்வாறிருக்கையில், இவ்வலுவலகம் வேண்டாம் என, ஒன்றிணைந்த எதிரணியினர் கூப்பாடு போடுகிறார்கள் என்றால், உண்மை வெளியாகும் என்ற பயமே அவர்களுக்குள்ளது. அதனால் தான், அவர்கள் இவ்வாறு கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறிய, அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, எக்னெலிகொட, ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், தாஜுதீன் போன்றோரது விவகாரங்களில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளியாகும்' என்றும் கூறினார்.
நேற்று (17), அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம், சிறியதொரு பிரச்சினையாகும். அந்தச் சிறிய பிரச்சினையை, பாரிய பிரச்சினையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். இனவாதப் பிரச்சினையாக திரிபுபடுத்த எத்தணிக்கின்றனர். ராஜபக்ஷ ஆட்சியின் போது, பல்கலைக்கழகங்கள் மூடப்படவில்லையா? இப்போது மட்டும் ஏன் குதிக்கிறார்கள். சில இடங்களுக்குச் சென்று கடைகளை உடைக்கிறார்கள். அதன்மூலம் இனவாதப் பிரச்சினையைத்
தூண்ட நினைக்கிறார்கள். அன்று ஆயிரம் பேர் காயமடைந்தனர். இன்று ஒருவர் மாத்திரமே காயமடைந்துள்ளார். நல்லிணக்கத்தை ஒரே வருடத்தில் ஏற்படுத்திவிட முடியாது' என்றார்.
'2020 வரை கால அவகாசம் உள்ளது. இவ்வாறான சம்பவங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூடக் கண்டிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள், சம்பவம் தொடர்பில் பொலிஸில் ஏதேனும் முறைப்பாடு செய்திருந்தால், அது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பர்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago