2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

1,000 வைத்தியருக்கு இன்று சுகவீனம்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்தும், 1,000 வைத்தியர்கள், இன்று (04) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் என, அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

“அதற்குப் பின்னர், கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும். அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலும் எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படும்” என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியில், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகளின் 17 சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பர் எனத் தெரிவித்த அவர், நிறைவேற்றுச் சேவையாளர்கள் முகம் கொடுக்கும் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்துகொள்வது, இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .