2025 ஜூன் 18, புதன்கிழமை

1,051 இலங்கையர்கள் சுயதனிமையில்

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 1,051 இலங்கையர்கள், காலி மாவட்டத்திலுள்ள கொக்கல மற்றும் கொஸ்கொட ஆகிய பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களென, காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர், வைத்தியர் வெனுர கே. சிங்க தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவு, இந்தியா, டுபாய், அவுஸ்தி​ரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்த இலங்கையர்களே, இராணுவத்தினரின் மேற்பார்வையின் கீழ், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவிலிருந்து 491 இலங்கையர்களும் இந்தியாவிலிருந்து 163 பேரும் டுபாயிலிருந்து 142 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைத் தந்த 255 இலங்கையர்களுமே ஹோட்டல்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .