2025 ஜூன் 12, வியாழக்கிழமை

10 மணிநேர நீர் வெட்டு

Freelancer   / 2025 ஜூன் 11 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 
 
அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ நகர சபை பகுதிகளுக்கும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேச சபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளன. 
 
அத்துடன், கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது. (a)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .