2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்?

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.கமல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து, 11 இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான  நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி​யமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாயுள்ள நிலையிலேயே, சற்றுமுன்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .