Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளை, 08ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரதடன இதற்கான உத்தரவை இன்று (02) பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தில் குறித்த அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில், பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 16 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
40 minute ago
1 hours ago