Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை இன்று (07) காலை குளவிகள் கொட்டியதில், 12 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும், மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ஏழாம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீதே மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு தாக்கியுள்ளது.
இதன்போது, 06 பெண்களும் 02 ஆண்களுமாக 08 பேர் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில் நால்வர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், நால்வர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன், மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
6 hours ago