2025 ஜூன் 16, திங்கட்கிழமை

12 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தில் குறித்த அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், பொலிஸ் பரிசோதகர்  ஒருவர், உப பொலிஸ்  பரிசோதகர் ஒருவர் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 16 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .