2025 ஜூன் 16, திங்கட்கிழமை

151 இந்தியர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களில் பணியாற்றி வந்த, 151 இந்தியர்கள் நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து ஸ்​பைஷ் ஜெட் விமான சேவையின் விஷேட விமானம் மூலம் இவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.

வருகைத் தந்த 11 பேர் கட்டார் நாட்டுக்கு ​அனுப்பப்படவுள்ளதுடன், ஏனைய 140 பேரும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்ற வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X