2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

16 தேர்தல் ஒத்திகைகள் எதிர்வரும் நாள்களில்

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 14ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இடங்களில் தேர்தல் ஒத்திகைகள் நடத்தப்படவுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்த மாதம் 7ஆம் திகதி அம்பலாங்கொடையில், தேர்தல் ஒத்திகையொன்று நடைபெற்றிருந்த நிலையில், எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேர்தல் ஒத்திகையானது, இரண்டு, மூன்று மாவட்டங்களை ஒன்றாக இணைத்து, நடைபெறவுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களை அண்மித்த வகையில், 2 தேர்தல் ஒத்திகைகள் நடைபெறவுள்ளதெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .