2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

‘160 பேரின் ஆதரவு 20க்கு கிடைக்கும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தம், 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென அறிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, அந்தத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 160 பேரின் ஆதரவு கிடைக்குமெனத் தெரிவித்தார்.

 “இந்நிலையில், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நல்ல பல விடயங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். அதில், நாட்டுக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சரத்துகள் நீக்கப்பட்டே, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.

பலப்பிட்டியவில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “கடந்த ஐந்து வருடங்களுக்குள் நாடு பின்னோக்கிச் சென்றது. ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையால் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டது. அதற்கு, அரசமைப்பின் 19ஆவது திருத்தமே பிரதான காரணமாக அமைந்திருந்தது” என்றார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .