2025 ஜூன் 26, வியாழக்கிழமை

164 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

Editorial   / 2019 மே 14 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியமானது, இலங்கைக்கு வழங்கத் தீர்மானித்திருந்த 5ஆம் தவணைக் கடன் தொகையான 164 டொலர் மில்லியனை வழங்க குறித்த நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 வருட வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியமானது 1.5 பில்லியன் டொலர்களை  இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய இந்த வேலைத்திட்டத்தின் இறுதி தவணை கடன் தொகையானது கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்க தீர்மானிக்கப்பட்ட போதும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, ஒரு வருடத்தால் அதன் கால எல்லை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று 13 கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையானது இலங்கைக்கு 164 ​மில்லியன் டொலர்ளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .