2024 மே 08, புதன்கிழமை

17 சிறார்களை கடத்தியவர் கைது

Freelancer   / 2024 ஏப்ரல் 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம்  மாலை அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என திணைக்களத்தின் விசாரணை அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையை சேர்ந்த 76 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இலங்கையை சேர்ந்த 17 சிறார்களை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வௌியேற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X