2025 ஜூன் 28, சனிக்கிழமை

18 துப்பாக்கி ரவைகளுடன் வீட்டின் உரிமையாளர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஆராச்சிக்கட்டவ- பீட்டர்வத்த பிரதேசத்தில், பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகளுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, 18 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வீட்டிலிருந்து, 5 கசிப்பு போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மோலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்​கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .