Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 28 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 17 ஆம் திகதி வரை 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 19,620 இலங்கையர்கள் குவைத்தில் செல்லுபடியான வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் விதிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார், மேலும் குவைத்துக்குள் சட்டப்பூர்வமாக மீண்டும் நுழைய அனுமதிக்கப்படுவார்.
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்த சந்தர்ப்பம் சிறந்த வாய்ப்பாக இருப்பதால், சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்தால், இது குறித்து அறிவித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர உதவிடுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொதுமக்களை கோரியுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
49 minute ago
5 hours ago