2025 ஜூன் 18, புதன்கிழமை

2,200 பேருடன் கபே அமைப்பு கண்காணிப்பு பணிகளில்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே அமைப்பின் 2,200 கண்காணிப்பாளர்கள், நாடு முழுவதும் நடமாடும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இந்த நடமாடும் கண்காணிப்பு பணிகளுக்காக 80இக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்பின் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திகாடுமடுல்ல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் 2 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதென அவர் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று இரவு கட்சியொன்றின் ஆதரவாளர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதைப் போன்று, திகாமடுல்ல பிரதேசத்தில் இன்று காலை கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .