Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஜூன் 22 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த விமானம் பலாலியிலிருந்து இரத்மலானையை நோக்கி பயணித்த போதே 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வில்பத்து சரணாலயத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட எரிகணை தாக்குதலினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் பயணித்த 32 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசேட வழக்காக கவனத்தில் கொண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதி கட்டளையிட்டுள்ளார்.
சந்தேகநபர்களான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் எரிகணை படையணியின் உறுப்பினர்கள் இருவரையும் அன்று வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago