2025 மே 15, வியாழக்கிழமை

நாரஹேன்பிட்டியில் நாளை போக்குவரத்து தடை

Thipaan   / 2015 ஜூலை 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்ட மற்றும் எவ்விடிகல மாவத்தையில் நாளை காலை 7 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை போக்குவரத்து தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் இடம்பெறுவதாலேயே இத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

பேஸ்லைன் வீதியின் நாரஹேன்பிட்டி சந்தி, பார்க் வீதியிலிருந்து எல்விட்டிகல மாவத்தை சமிக்ஞை விளக்கு சந்தி மற்றும் நாவல சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்திவரை போக்குவரத்து தடைப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் வசிப்போர், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள், அப்பகுதிகளில் வேலைபார்ப்போர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் மட்டும் தடைவிதிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதியால் செல்ல அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .