2025 மே 14, புதன்கிழமை

கொழும்பில் 21 மணித்தியால நீர்வெட்டு

Gavitha   / 2015 ஜூலை 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (25) 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 5.00 மணிவரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கலட்டுவௌ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மஹரகம, கொழும்பு 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீரின் வேகம் குறைவாக இருக்கும் என்றும் சபை அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .