2025 மே 14, புதன்கிழமை

மஹிந்த ராஜபக்ஷ வெல்வார்: ஜோதிடர்

Kanagaraj   / 2015 ஜூலை 24 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவார். எனினும், அவருக்கு பிரதமராக வருவதற்கான திறமை இல்லை என்று பிரபல ஜோதிடர் நாத்தாண்டியே பி.டீ. பெரேரா தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என்றும் அத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெறுவார் என்றும் இந்த சோதிடரே கூறியிருந்தார். 

அதேபோல, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா தோல்வியடைவார் என்றும், அவர் சிறைக்கு செல்வதுடன் சிறையில் அடைத்தவர்களே அவரை மீட்பார் என்றும் இந்த சோதிடரே தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமன்றி தான் இழந்த வரப்பிரசாதங்களை சரத் பொன்சேகா 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொள்வார் என்றும் அவர், தரமுயர்த்தப்படுவதுடன் அவருக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் என்றும் இந்த சோதிடரே தெரிவித்திருந்தார்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொள்ளும். ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்கும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராகுவதற்கு முடியாது. 

பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரபல்யமானவர்கள் சிலர் தோல்வியடைவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அடுத்து பொதுத்தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி அதிகாரம் கொஞ்சம் அதிகரிக்கும் என்றும் சோதிடர் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0

  • krishnan Saturday, 25 July 2015 07:49 AM

    ok, ivvalavu sollukerngale, avar eppothu saavar enru solla mudiyuma? appa thaan niga solluvathai namba mudiyum.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .