2025 மே 14, புதன்கிழமை

வெள்ளை வானால் மைத்திரிக்கு ஆபத்து: குணசேன

Kanagaraj   / 2015 ஜூலை 26 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கே வந்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன என ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஏ.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை கம்உதாவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பில், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .