2025 மே 15, வியாழக்கிழமை

போலி ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலை சீனாவில் முற்றுகை

Gavitha   / 2015 ஜூலை 28 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த தொழிற்சாலையொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நடத்திச்சென்ற 9 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களிலுள்ள பகுதிகளை சேகரித்து போலியான ஐ போன்களை, 100 தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்கின்றார்கள் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இதுவரை 19 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஐ போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சாலை கடந்த மே மாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .