2025 மே 15, வியாழக்கிழமை

தேசிய அடையாள அட்டைக்கான கட்டண அதிகரிப்பு நிறுத்தம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஆட்பதிவு திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளதென திணைக்கள அலுவலளர்கள் தெரிவித்தனர்.

முதலில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 3 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரை அதிகரிக்கவும் அடையாள அட்டையிலுள்ள தகவல்களை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 1,000ரூபாவாக  அதிகரிக்கவும்திணைக்களம் தீர்மானித்திருந்தது.

தொலைந்த அல்லது பழுதடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 15ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படவிருந்தது.

தேர்தல் தருணத்தில் இவ்வாறாக கட்டணங்களை அதிகரிக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் உட்பட பல தரப்பினரிடமிருந்து ஆட்பதிவு திணைக்களத்துக்கு வேண்டுகோள் கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .