2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாக்கெண்ணும் நிலையத்துக்கு அருகாமையில் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை வாக்கெண்ணும் நிலையமான ரோயல் கல்லூரிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியிலிருந்து நாட்டு வெடிமருந்து பயன்படுத்தும் 12 துப்பாக்கி மற்றும் அதற்கான 10 ரவைகள் வைத்திருந்த ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை 2. 20 மணியளவிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சுமதிபாலவின் பெயரில் இருந்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .