2025 ஜூன் 19, வியாழக்கிழமை

20ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி இன்று

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அனுமதி வழங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைவு, அரசாங்க அச்சுத் திணைக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அது தொடர்பான வர்த்மானி அறிவித்தல் இன்று (03) வௌியிடப்படும் என அரசாங்க அச்சக பிரிவின் அதிபர் கங்கானி கல்பனா லியனகே கூறியுள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு  நீதியமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து,  20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லையெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் தப்புல டி ​லிவேரா, நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ள முடியுமென, நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .