2025 ஜூன் 19, வியாழக்கிழமை

‘20ஆவது திருத்தம் பசிலுக்கா, மைத்திரிக்கா?’

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஜித் அணி கேள்வி; ஜனநாயக்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்கிறார்

அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை அரசாங்கம் நாட்டு மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ கொண்டுவரவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, சில நபர்களுக்குப் பதவிகளை வழங்கும் வகையிலேயே திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

கட்சியின் தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கும் பசில் ராஜபக்‌ஷவை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்காகவா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதவியொன்றை உருவாக்குவதற்காக​வா எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தற்போதிருக்கும் சுயாதீனத்தை இல்லாமல் செய்யும் வகையிலேயே, 20ஆவது திருத்தத்தில் திருத்தம் செய்யப்படுகிறதெனத் தெரிவித்த அவர், இல்லையேல் ஜனநாயக்கத்தை இல்லாமல் செய்யும் செயற்பாடா, சுயாதீனக் குழுக்களை இல்லாமல் செய்யவில்லையெனில், அதைப் பலப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பாதுகாப்பு, மக்களின் உரிமைகளைப் பலப்படுத்தும் வகையிலேயே அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் அவ்வாறில்லாமல் தனி நபர்களுக்காக​வும் அவர்களின் வசதிகளுக்காகவும் அல்ல எனத் தெரிவித்த அவர், உறுப்பினரொருவரை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரவும், மற்றுமொரு நபரைப் பிரதமராக்கவும் ஜனாதிபதியாக்குவதற்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பதவிகளை வழங்கும் நோக்கிலும் அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளப்பட உள்ளனவெனத் தங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .