2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

24 மணித்தியாலங்களில் 137 முறைப்பாடுகள்

J.A. George   / 2020 ஜூலை 23 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் (21) பிற்பகல் 4 மணி முதல் நேற்று (22) பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதியில் தேர்தலுடன் தொடர்புடைய 137 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 22 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 115 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரான இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான  4500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் தேசிய தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 919 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 3581  முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதுவரை தேர்தல் வன்செயல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .