Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்ததுள்ளதென தெரிவிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன், கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்திலேயே நாட்டை முன்கூட்டியே மூடி “லொக் டவுன்” செய்திருந்தால் 3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பிளவுபடும் வரையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தினத்தை அரசாங்கம் ஒத்திவதை்திருந்தனெவும், அரசியல் இலாபத்தை மனதில் கொண்டே நாட்டை “லொக் டவுன்” செய்யாதிருந்தாகவும் சாடினார்.
இதனால் இன்று நாடு முழுவதும் பாடுபடுகின்றது என்றும், பொறுப்பற்ற நிலையில் வேட்பு மனு , தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே கட்சி அலுவலகங்களில் கூடினார்கள் எனவும் சுட்டடிக்காட்டினார்.
அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரகணக்கானோர் கூடும் ரோயல்-தோமியன், ஆனந்த-நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி , அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கொரோனானவை வளர விட்டனர் எனச் சாடியுள்ள அவர், வேட்பு மனு முடிந்த மறுநாளேதிகதியே நாட்டை "லொக்டவுன்" செய்தனர் எனவும் சாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago