2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம்

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்குக்கும் இடையில் ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை சீனா உணர்வதாகவும் நாட்டில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களால் முடிந்த உதவியை தாங்கள் செய்ய விரும்புகிறோம் என்று சீன பிரதமர் தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த நிவாரணத்துடன் சேர்த்து சீனாவின் மொத்த உதவித் தொகையை 500 மில்லியன் யுவான்கள் (ஏறத்தாழ 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7