2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

36 பேர் நாடு திரும்பினர்; மேலும் 5595 பேர் தனிமைப்படுத்தலில்

J.A. George   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, வெளிநாடுகளில் சிக்கியிருந்து மேலும் 36 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 18 பேர், கட்டாரில் இருந்து 16 பேர் மற்றும் சவூதிய அரேபியாவில் இருந்து 02 பேர் இவ்வாறு இன்று(28) நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை,  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 150 பேர், மாலைத்தீவில் இருந்து 05 பேர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 04 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5595 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .