2024 மே 17, வெள்ளிக்கிழமை

4 பதின்ம வயது வன்புணர்வு சம்பவங்கள் பதிவு

Simrith   / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை மாவட்டத்தின் புத்தல, வெதேகும்புர, குடாஓயா மற்றும் வெல்லவாய பொலிஸ் பிரிவுகளில் நான்கு பதின்ம வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

புத்தல, கட்டுகஹகல்கே பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இளைஞரால் கடத்தப்பட்டு வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 19ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற அவர் காணாமல் போனதாக அவரது தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் ஏப்ரல் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

விசாரணையில் அவர் (சிறுமி) தனது மூத்த சகோதரியின் காதலரை காதலித்து வந்ததாகவும், அவருடன் தப்பி ஓடியதாகவும் தெரியவந்துள்ளது. 25 வயதுடைய இளைஞன், வெல்வாய பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று, சுமார் ஒரு வார காலமாகவும், பின்னர் அவிசாவளை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்தும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி 17 வயதுடைய காதலனால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். அந்த இளைஞனுடனான உறவை கைவிடுமாறு சிறுமியை எச்சரித்ததாகவும், ஆனால் அவர் அவருடன் தப்பிச் சென்றதாகவும் அவரது பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்தனர். மெதகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவர்கள் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளைஞனை கைது செய்வதற்காக தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் மொனராகலை பொலிஸ் பீ.எஸ்.சமிந்தவின் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
 
மற்றுமொரு சம்பவத்தில், கடுவாயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ பிரதேசத்தில் தெலுல்ல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி 22 வயதுடைய ஒருவரால் வன்புணர்வு செய்யப்பட்டு கருவூட்டப்பட்டுள்ளார். வயிற்றில் வலி ஏற்பட்டதாகக் கூறிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. 

விசாரணையில், அவர் ஜூன் 2023 முதல் அந்த இளைஞனைக் காதலித்து வந்ததாகவும், வீட்டில் தனியாக இருந்த சமயங்களில் அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரியவந்தது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவதம் குறித்த மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.டி.எம்.றியாஸ் மேற்கொண்டு வருகின்றார். 

இதேவேளை, தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மே 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து அவரை கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த போது தனது தந்தை தன்னை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸ் அவசர சேவைக்கு தகவல் கொடுத்த தனது தோழி ஒருவரிடம் சிறுமி இதை வெளிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .