2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

4 மாணவிகளை AI மூலம் நிர்வாணப்படுத்திய 2 மாணவர்கள்

R.Tharaniya   / 2025 ஜூன் 10 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில் நிர்வாண உடல்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒட்டவைத்து, அவற்றை பாடசாலையின் சமூக ஊடக தளங்களில் பரப்பியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய  உத்தரவிட்டார்.

மேலும், இரண்டு மாணவர்களையும் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்புமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமிகளில் ஒருவரின் தந்தை புகைப்படங்களைப் பார்த்து, அது குறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்ததை அடுத்து, சந்தேகத்திற்குரிய இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8