2024 மே 04, சனிக்கிழமை

5 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் கோப் எனப்படும் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்களே மேற்படி குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நாளையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதியும், ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிறுவனத்தின் தலைவர் எதிர்வரும் 26ஆம் திகதியும் கோப் எனப்படும் என அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .