Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 15, புதன்கிழமை
Simrith / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பவம் நடந்து சுமார் 26 வருடங்களின் பின்னர் ஆயுதக் குழுவினால் பிரதேசவாசிகள் 8 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் கந்தளே பரதிபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
தடுப்புக் காவலின் போது, 1998 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆயுதமேந்திய குழுவொன்று பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய, பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடூழிய ஆயுள் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
கொலை செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை மட்டும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago