2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

598 கிலோ கிராம் கடலட்டைகளுடன் இருவர் சிக்கினர்

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

சட்டவிரோதமானமுறையில், கடலட்டைகளை பிடித்து அவற்றை  ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்ற இருவரை, கற்பிட்டி கடற்படை முகாம் அதிகாரிகள் நேற்று (18)  கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி- முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்தே, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனரென, கடற்படையினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, உரப்பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த,  598 கிலோ  கிராம் கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டி ,உக்குவலை  ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 42, 44 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை மேலதிக  நடவடிக்கைகளுக்காக, கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .