2025 ஜூன் 28, சனிக்கிழமை

6 பாகிஸ்தானியர்கள் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடிநியுஸ் வீதி பிரதேசம், பெரியமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்து 6 பாகிஸ்தானியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு- குடியகல்வு சட்டதிட்டங்களை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்தவர்களே நேற்றைய தினம் (22) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் 18, 23, 25, 24 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென்றும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .