2024 ஜூன் 17, திங்கட்கிழமை

61,000க்கும் அதிகமான மின்துண்டிப்பு முறைப்பாடுகள் பதிவு

Simrith   / 2024 மே 26 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபை இன்று பிற்பகல் 2 மணிக்குள் 61,000க்கும் அதிகமான மின் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது.

மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்குள்ளாக சுமார் 26,700 மின் துண்டிப்புகள் சீர்செய்யப்பட்டு 425,500 நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் மின்சாரத்தை மீட்டெடுக்க CEB நிர்வாகமும் சேவை ஊழியர்களும் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். 

இருப்பினும், வெள்ளிக்கிழமை (மே 24) வரை, 59,400 க்கும் மேற்பட்ட மின் முறிவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக மே 21 மற்றும் 24 க்கு இடைப்பட்ட காலத்தில் 431,500 க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X