2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’754 பேர் கைது’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் உற்சவ காலத்தில் நாடு முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 754 பேர் வரையில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 18 பேரும், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 264 பேரும் அத்துடன் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த மதுபான நிலையங்கள் 264 என பல்வேறு இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .